Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியத்துக்குள்ள முடிச்சிட்டு கிளம்பிடுவாங்க போல..! – 11 மணிக்குள் 25 சதவீதம் தாண்டிய வாக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:54 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணிக்குள்ளாக ஓட்டுப்பதிவு 25% தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்றுகாலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும், கொரோனா உள்ளிட்ட காரணங்களாலும் காலை வேளையிலேயே பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதால் வாக்கு சதவீதம் வேகமாக உயர்ந்து வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 11 மணிக்குள் தமிழகம் முழுவதும் 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. பல பகுதிகளில் வாக்கு இயந்திரம் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments