தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! – பேருந்து நிறுத்தங்கள் பட்டியல்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (13:34 IST)
தீபாவளிக்கு சென்னையிலிருந்து மக்கள் பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகள் குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபாவளிக்காக நவம்பர் 11 முதல் 13 வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்தும் புறப்படும்.

மேலும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், புதுச்சேரி, கடலூர், செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

இவை தவிர மயலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், புதுக்கோட்டை, விருதுநகர், திருப்பூர், ஈரொடு, ராமநாதபுரம், கன்னியாக்குமரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments