Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்த கொரோனா; ஸ்ட்ரிக்டான ஆட்சியர்கள்! – ஊரடங்கு மாவட்டங்கள்!

Webdunia
சனி, 2 மே 2020 (15:02 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து தமிழக மாவட்டங்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் முழு ஊரடங்கை அறிவிக்க தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் முழு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்த முறையும் ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து தஞ்சாவூரிலும் ஊரடங்கு முடியும் வரை வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments