Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் – புதிய சாதனை!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (12:19 IST)
தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் மொத்த தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அதை தொடர்ந்து இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முறை 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் 3.96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments