Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தண்ணீர் திறப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (13:13 IST)
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆடி மாதம் 18ம் நாள் தமிழகமெங்கும் ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய நாளில் மக்கள் புனித தலங்களுக்கு சென்று வழிபட்டு, நீர்நிலைகளில் நீராடுவர். தமிழகமெங்கும் ஆறுகள் வறண்டு கிடப்பதால் ஆடிப்பெருக்கு விழாவை எப்படி கொண்டாடுவது என மக்கள் சோகத்தில் இருந்தனர்.

தற்போது மேட்டூர் அணையில் கணிசமான அளவு நீர் இருப்பதால் ஆடிப்பெருக்கில் மக்கள் நீராட வசதியாக தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடிப்பெருக்கை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments