Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்றார்.

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2015 (00:46 IST)
கடந்த 24 ஆம் தேதி தமிழக சட்ட மன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டம் தொடர்ந்து 29 நாட்கள் நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 29 ஆம் தேதியுடன்  நிறைவடைந்தது. இதனையடுத்து, தமிழக சட்ட மன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 

 
இந்த நிலையில், சிறுதாவூர் பங்களாவில் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்ல உள்ளார் என்று தகவல் வெளியானது. இதை மெய்பிக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலையில், சிறுதாவூர் சென்றார். அங்கு அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளார்.
 
ஆனால், சிறுதாவூர் பயணம் குறித்து, அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் குறித்தும், வெற்றி வியூகம் வகுக்கவும், பலமான கூட்டணி அமைக்கவும், முக்கிய முடிவுகளை அறிவிக்கும் வகையில் அங்கு முக்கிய அதிகாரிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 
 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments