Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலர்ட்டை எதிர்கொள்வது எப்படி? –முதல்வர் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (12:25 IST)
அக்டோபர் 7-ந்தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மாவட்ட உயரதிகாரிகளோடு ஆலோசணை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மிக அதீத கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அக்டோபர் 7-ந்தேதி அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் பீதி அடையத் தொடங்கி உள்ளனர். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. எனவே தற்போதைய கனமழையால் அதைப் போன்ற நிலைமை மறுபடியும் வரக்கூடாது என்று அரசு இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி மற்றும் தங்கமணி போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர். 32 மாவட்டங்களையும் சேர்ந்த அதிகாரிகளும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு இக்கூட்டத்தில் முதல்வரோடு ஆலோசித்து வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தமிழக அணைகளில் உள்ள நீர் அளவு, நீர் வெளியேற்றும் நேரம் போன்றவைக் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments