Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (09:04 IST)

வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பழைய ஊதியக் கொள்கைகளை அமல்படுத்தக் கூறி அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை வரும் டிசம்பர் 4 ஆம் தேதி காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் அரசு தங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கஜா புயல் நிவாரணப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அதுவரை பொறுமை காத்து அரசு ஊழியர்கள் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments