Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசுவிடமிருந்து காக்க கொசுவலை! - முதல்வரின் புதிய திட்டம்!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (08:43 IST)
தமிழகத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுக்க மக்களுக்கு கொசு வலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் நீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக பரவி வருகிறது. கொசுக்களினால் பல்வேறு நோய்கள் மக்களை தாக்கி வருகின்றன. கொசு பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் சூழலில் ஏழை, எளிய மக்களை கொசுக்களினால் பரவும் நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு கொசுவலைகள் வழங்க இருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலில் கொசுவலை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கபடும் எனவும், பிறகு அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வருக்கு கமெண்ட் செய்துள்ள பலர் கொசுவலை அளிப்பதை விடவும், கொசுக்களை ஒழிப்பதே முக்கியமானது என கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments