Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்… எம் எல் ஏக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா சோதனை!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (09:54 IST)
தமிழகத்தில் நாளை மறுநாள் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி உள்ளதால் கலைவாணர் அரங்கத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ல எம் எல் ஏக்கள், செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவை ஊழியர்கள் ஆகிய அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழோடு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், தலைமை செயலகத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments