Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கேரள முதல்வர்கள் ஆலோசிக்க திட்டம்… முல்லை பெரியாறு அணை விவகாரம்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:00 IST)
முல்லை பெரியார் அணையை பற்றி மீண்டும் சர்ச்சையான கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.

முல்லை பெரியார் அணை வலுவற்று இருப்பதாகவும் அதனால் அதன் கொள்ளளவை குறைக்க வேண்டுமென்றும் நீண்ட நாட்களாக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு முல்லை பெரியார் அணை வலுவாக உள்ளதாகவும், அணை கதவுகள், மதகுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறுசிறு பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பிரச்சனையைப் பற்றி பேச தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments