Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் காற்று மாசு??

Arun Prasath
திங்கள், 4 நவம்பர் 2019 (08:40 IST)
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசு வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. காற்று மாசு கட்டுபடுத்த டெல்லி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிகரித்துவரும் காற்று மாசால், டெல்லி மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் சாலையில் செல்வோர்கள் முகத்தை துணிகளால் மூடிக்கொண்டே செல்கின்றனர்.

காற்று மாசால் டெல்லி பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியை போல தமிழ்நாட்டிலும் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் “டெல்லியையும் வட இந்தியாவையும் கடந்த ஒரு வாரமாக வாட்டிக்கொண்டிருக்கும் காசு மாற்று தமிழகம் உட்பட கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு அடுத்த வாரத்திற்குள் பரவும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments