Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆவின் பால் விலையை ஏத்துனா மட்டும் கேள்வி கேக்குறாங்க..” தமிழிசை பாய்ச்சல்

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (08:59 IST)
தனியார் பால் நிறுவனங்களை கேள்வி கேட்காமல், ஆவின் பால் விலை ஏறினால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இதனை கண்டித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தை பொறுத்தவரை எல்லாமே அரசியல் ஆக்கப்படுவது போல் தான் இந்த பால் விலையும் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என்று கூறுகிற மு.க.ஸ்டாலினுக்கு, கொள்முதல் விலையை உயர்த்தும்போது பால் விலையும் உயரும் என தெரியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 4 ½ லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பலன் தருவதற்கான அறிவிப்பை தான் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். தனியார் பால் விலை அதிகமாக இருப்பதை கேட்காமல், உற்பத்தியாளர்களுக்கு பயன் தரும் ஒரு நல்ல நோக்கத்துக்காக ஆவின் விலை ஏற்றினால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments