Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசக்கூடாது: !அண்ணாமலைக்கு தமிழிசை அறிவுரை

Mahendran
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (13:16 IST)
அரசியல் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையான வார்த்தைகளால் பேசக்கூடாது என அண்ணாமலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலை அதிரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உட்பட பலர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு பாஜக வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலையின் பேச்சு குறித்து கூறிய போது தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

அவரவருக்கு ஒரு அரசியல் பாணி இருக்கலாம், அண்ணாமலைக்கும் ஒரு பாணி உள்ளது. ஆனால் தலைவர்களை பற்றி பேசும்போது வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments