Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை நம்பிக்கை !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (11:28 IST)
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி பல தகவல்களை மறைத்து விட்டதாகவும் அதற்காக தான் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற ஸ்டார் தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று. அங்கே திமுகவின் கனிமொழியும் பாஜகவின் தமிழிசையும் போட்டியிட்டதால் அதிக கவனம் பெற்றது. கடைசியில் திமுகவின் கனிமொழி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து விரைவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் வரும் என தமிழிசை தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ‘ கனிமொழி தனது கணவர், தனது மகன் மற்றும் அவரின் வருவாய் மற்றும் வசிப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை மறைத்துள்ளார். இவைக் குறித்தும் தேர்தலில் விதிகள் நடைமீறல்கள் குறித்தும் நான் வழக்கு தொடுத்துள்ளேன். விசாரணையின் முடிவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் வரலாம் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments