Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை நம்பிக்கை !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (11:28 IST)
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி பல தகவல்களை மறைத்து விட்டதாகவும் அதற்காக தான் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற ஸ்டார் தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று. அங்கே திமுகவின் கனிமொழியும் பாஜகவின் தமிழிசையும் போட்டியிட்டதால் அதிக கவனம் பெற்றது. கடைசியில் திமுகவின் கனிமொழி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து விரைவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் வரும் என தமிழிசை தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ‘ கனிமொழி தனது கணவர், தனது மகன் மற்றும் அவரின் வருவாய் மற்றும் வசிப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை மறைத்துள்ளார். இவைக் குறித்தும் தேர்தலில் விதிகள் நடைமீறல்கள் குறித்தும் நான் வழக்கு தொடுத்துள்ளேன். விசாரணையின் முடிவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் வரலாம் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments