Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு இல்லை: தமிழிசை விளக்கம்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (15:00 IST)
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் போது ஆளுநர் பன்வாரிலால் தனியாக ஆய்வு நடத்தி வருவது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
 
டெல்லி, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இதுபோன்ற ஆய்வில் ஈடுபடுவதில்லை. ஆளுநர்களை வைத்து மாநில அரசை கட்டுப்படுத்த பாஜக முயல்கிறது என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
 
இருந்தாலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஆய்வை நிறுத்தாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று தஞ்சையில் அவர் ஆய்வில் ஈடுபட்டார். திமுகவினரும் தொடர்ந்து ஆளுநர் ஆய்வுக்கு கருப்புக்கொடி காட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் ஆளுநர் ஆய்வு நடக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு செய்யவில்லை, ஆய்வு நடைபெறுவதால் ஆளுநர் ஆட்சி நடக்கிறது என்று சொல்லக் கூடாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments