Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி ; அவருக்கே என் ஆதரவு - தமிழருவி மணியன் ஓப்பன் டாக்

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (15:00 IST)
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என காந்திய மக்கள் இயக்கத்தை நடத்தும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தன்னுடைய நலம் விரும்பிகள், நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரிடம் அவர் ஆலோசனை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் அவரது வீட்டில் பல அரசியல் பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜ் சமீபத்தில் ரஜினியை சந்தித்து பேசினார். அதன் பின் காந்திய மக்கள் இயக்கத்தை வழிநடத்தும் தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்து பேசினார்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ரஜினியின் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அங்கே மிகப்பெரிய காந்தி புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. காந்தியின் கொள்கைகள் தனக்கு பிடிக்கும் என ரஜினி என்னிடம் கூறினார்.
 
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து அவர் என்னிடம் விவாதித்தார். அரசியலுக்கு வருவது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். நிச்சயம் அவர் அரசியலுகு வருவார். ஊழலற்ற நல்லாட்சியை அவர் தருவார். காந்திய மக்கள் இயக்கம் அவருக்கு துணை நிற்கும்” என அவர் தெரிவித்தார்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments