Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியாருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்: தமிழருவி மணியன்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (15:33 IST)
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் சரியாகவில்லை. நாளை சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.முன்னதாக முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்த அவர் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.


 

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவைக்கு பின்னால் மன்னார்குடி குடும்பம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பதால் வேறு வழியின்றி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்படி தனக்குரிய கடமையை ஆளுநர் சரிவர செய்து விட்டார்.

இந்த பினாமி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக.,  காங்கிரஸ், பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை கடந்து எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments