Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழருவி மணியன் செத்துட்டான் - இனி ஒருபோதும் அரசியலில் ஈடுபடபோவதில்லை!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (16:28 IST)
இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் - தமிழருவி மணியன் 
 
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் தனது உடல் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படி ஏற்று உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.  
 
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல் நலனை கணக்கில் கொண்டு ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர். இப்படியான சூழலில் ரஜினியை நம்பி வந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகிவிட்டார். 
 
ஆம், இன்று இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் "இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை. இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் தமிழருவி மணியன் செத்துட்டான். " என அதிரடியாக அறிவித்து அரசியலில் இருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார்.
 
தமிழருவி மணியனை ரஜினிகாந்த்,  கட்சியின் மேற்பார்வையாளராகவும், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.  ரஜினி கட்சி தொடங்கிய பின், காந்திய மக்கள் இயக்கம் அதனுடன் இணைத்துக் கொள்ளப்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்திருந்தார்.ஆனால், தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments