Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 20 மார்ச் 2025 (18:16 IST)
டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்பதைக் கோரி, குடும்பத்துடன் குடிக்கும் போராட்டத்தை தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த பகுதி வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 
 
மது குடித்துவிட்டு செல்லும் சிலர் ரகளையில் ஈடுபடுவதால், ஏற்கனவே புகாரும் எழுந்துள்ளது. இதனால், அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. இதில் பேசிய பார்த்திபன், "டாஸ்மாக் கடையை மூடாவிட்டால், குடும்பத்தோடு குடிக்கும் போராட்டத்தை நடத்துவோம்" என்று கூறியுள்ளார். இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments