Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.வின் அமைதி விருதுக்கு தமிழக சிறுவன் பரிந்துரை!

ஐ.நா.வின் அமைதி விருதுக்கு தமிழக சிறுவன் பரிந்துரை!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (13:36 IST)
ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த சக்தி என்ற சிறுவன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் பழங்குடியின சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறார்.


 
 
காஞ்சிபுரம் மாவட்டம் தியாகிகள் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் சக்தி. பாசிமணி விற்றுக்கொண்டிருந்த சக்தி தொண்டு நிறுவனம் ஒன்றில் உதவியுடன் இந்த பள்ளியில் படித்து வருகிறான்.
 
விடுமுறை நாட்களில் பாசிமணி விற்க செல்லும் சக்தி தனது சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்களை சந்தித்து பேசுவது வழக்கம். அப்போது நீங்களும் பள்ளியில் படித்தால் பெரிய ஆளாக வரலாம், நான் உங்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என ஆர்வமூட்டி அவர்களது பெற்றோரிடமும் பேசுவான்.
 
சிறுவன் சக்தி மற்றும் அவனது நண்பர்கள் மூலம் 25 சிறுவர்கள் இதுவரை பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால் பழங்குடியின சிறுவர்கள் பலர் பள்ளிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
 
இப்படி பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் சிறுவன் சகதியை ஊக்குவிக்கும் விதமாக அவனது பெயரை ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு ஹாண்ட் இன் ஹாண்ட் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments