Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்ட களத்தில் குதிக்கும் கவிஞர்கள் - அதிரும் தமிழகம்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (12:15 IST)
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரி, தமிழகம் எங்கும் வலுப்பெறும் போராட்டத்தில் தமிழ் கவிஞர்களும் தற்போது குதிக்க உள்ளனர்.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை அலங்காநல்லுர், அவனியாபுரம், பாலமேடு என தொடங்கிய இந்த போராட்டம் தமிழகமெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் எழுச்சிப் பேரவை சார்பில் இன்று மதியம் 12 மணிக்கு, சென்னை மெரினா கண்ணகி சிலையருகே, ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக களத்தில் குதிக்க உள்ளனர்.

இதில், கவிக்கோ அப்துல் ரகுமான். மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், இயக்குநர் யார் கண்ணன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் உள்ளிட்ட கவிஞர்களும், தமிழறிஞர்களும், பங்கேற்கின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments