Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்.. மிதக்கும் காயல்பட்டினம்.. தமிழ்நாடு வெதர்மேன்..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (10:34 IST)
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் என்ற பகுதியில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து வந்ததை அடுத்து அந்த பகுதியே  வெள்ளத்தில் மிதந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த அளவு ஒரு ஆண்டுக்கான பெய்யும் மழை அளவை விட அதிகம்
 
தூத்துக்குடியில் 1000 ஆண்டுகளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாக இது இருக்கலாம். புயல் இல்லாமல், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூட இல்லாமல் காற்று சுழற்சியில் இருந்து பெய்யும் மழை. 
 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், 1992-ல் மாஞ்சோலையில் பதிவான 965 மி.மீ மழைக்கு அடுத்து இரண்டாவதாக அதிக மழை இதுதான் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments