கொளுத்தி வரும் கோடை வெயில்.. சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

Siva
புதன், 10 ஏப்ரல் 2024 (07:15 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வரும் நிலையில் சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் படிப்படியாக வெப்பம் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல நகரங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி கொண்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரில் இயல்பை விட குறைவான வெப்பநிலை இருக்கும் என்றும் அதற்கு கிழக்கு காற்று தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவு தற்போது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கோடை காலங்களில் மிகவும் அதிகமாக வெப்பம் பதிவாகும் இடங்களில் ஒன்றாக சென்னை இருக்கும் என்றும் மே மாதத்தில் மிக அதிகமாக வெப்பநிலை பதிவாகும் இடமாக சென்னை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் மக்களை தாக்கி வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மட்டும் சென்னையில் வெப்பநிலை குறையும் என்று கூறியிருப்பது தற்காலிக மகிழ்ச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments