Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதம் இப்படி நடந்ததே இல்லை.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!

Siva
புதன், 19 ஜூன் 2024 (07:25 IST)
சென்னையில் நேற்று இரவு திடீரென மழை பெய்த நிலையில் இன்னும் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ரெட் தக்காளி நிகழ்வு நடைபெறும் என்றும் ஜூன் மாதம் எப்படி நடந்ததே இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ரெட் தக்காளி நிகழ்வு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதாவது 150 முதல் 200 மில்லி மீட்டர் மழை வரை பெய்யலாம் என்றும் குறிப்பாக தென் சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொருத்தவரை ஜூன் மாதம் பெரிய அளவில் மழை பெய்தது இல்லை என்றும் ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் 18 நாட்களில் 10 நாட்கள் மழை பெய்துள்ளது என்றும் மழைக்காலத்தில் மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்வு ஆச்சரியமாக ஜூன் மாதத்தில் நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சென்னையில் இன்னும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments