Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழை எப்படி? வானிலை மையம் தகவல்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (12:39 IST)
இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரி களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தென்மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
தென்மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments