Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய புயல் - 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (14:01 IST)
வங்க கடலில் எதிர்வரும் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

 
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் மத்திய மேற்கு – வட மேற்கு பகுதியில் எதிர்வரும் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது நாளை, நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனியில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தகவல். 
 
மேலும், தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், குமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments