Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:56 IST)
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
ஆம், வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, கரூர், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்த நிலையில் இன்றும் அதே மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய பகுதிகளில் நாளை  இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments