Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று எங்கெங்கு கனமழை?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:01 IST)
தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வாரமும் கனமழை நீடித்து வரும் சூழலில் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதத்திற்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் வட தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதே போல நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments