Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது- துரைமுருகன்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (22:20 IST)
தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளரருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில்  10 ஆண்டுகளுக்குப் பின் அதிமுகவை வீழ்த்தி ஸ்டாலின் தலைமையிலான திமுக  வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவில் எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என மூன்றணியாக உள்ளதால், உட்கட்சி பிரச்சனைகளே அவர்களுக்குப் பெரிதாக உள்ளதுபோல் தோற்றம் உருவாகியுள்ளளாது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரியில்  திமுக பொது உறுப்பினர் கூட்டம்  நடந்தது, இதில், கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ.7 லட்சம் கோடியை கடனில் விட்டுச் என்ருள்ளனர். அதனால், நிதித்துறையில் பணியாற்றுவோர் தடுமாறி வருகின்றனர். இதுவரை அதிமுகதான் எதிர்க்கட்சியாக இருந்தது,. ஆனால், பாஜக பிசாசு மாதிரி உருவெடுத்துள்ளதால், நமக்கு எதிராக சம பலத்துடன் போராடுவார்கள்…அதனா, அவர்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தங்களை முக்கிய எதிர்க்கட்சி என திமுக மூத்த தலைவர் கூறியது பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments