Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

Siva
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (07:56 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டில் கோடை காலம் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் கடும் வெப்பத்துடன் இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக, மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் உச்சகட்ட வெயிலை கொண்டிருக்கும். ஆனால், இந்த வருடம் முன்கூட்டியே கோடை வெப்பம் தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்த நிலையில், ஒவ்வொரு நாளும் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் முதல் முறையாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டதால், மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments