Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் மதுக்கடையில் ஜெயலலிதா படத்தை வைக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேர் கைது

டாஸ்மாக் மதுக்கடையில் ஜெயலலிதா படத்தை வைக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள்  8 பேர் கைது
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (23:05 IST)
சிதம்பரம் அருகே, டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை மிகவும் பாதுகாப்பாக பறிமுதல் செய்தனர்.
 

 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இதனை வலியறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை ஊர்வலமாக காங்கிரஸ் நிர்வாகிகள் எடுத்துச் சென்றனர். அந்தப் படத்தை, டாஸ்மாக் மதுபானக் கடையில் வைக்க முயன்றனர்.

webdunia

 

இதை சற்றும் எதிர்பாரத போலீசார் திடுக்கிட்டு,  அவர்களை உடனே, தடுத்து நிறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை பறிமுதல் செய்தனர். பின்பு, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் படைத்தை மிகவும் பாதுகாப்பாக உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil