Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (19:30 IST)
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு!
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனம் செய்வதற்காக டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுபவர்கள் பட்டியலில் சைலேந்திரபாபு பெயர் முதல் இடத்தில் இருந்ததால் அவர் கண்டிப்பாக தமிழகத்தின் டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது 
 
எதிர்பார்த்தது போலவே சற்றுமுன் சைலேந்திரபாபு தமிழகத்தின் அடுத்த டிஜிபி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியாக பதவி ஏற்க இருக்கும் சைலேந்திரபாபு கடந்த 1987 ஆம் ஆண்டு பேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழக காவல் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments