கூடுதலாக 30,000 அம்போடெரிசின் பி மருந்துகள் தேவை!

Webdunia
ஞாயிறு, 6 ஜூன் 2021 (14:51 IST)
தமிழக அரசின் சார்பில் கூடுதலாக 30,000 மருந்துகளை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தகவல். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை தமிழகம் வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. 
 
ஆம், ஜூன் 2-ம் தேதி நிலவரப்படி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 518 ஆக இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. 
 
தொடர்ந்து நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அம்போடெரிசின் பி மருந்துக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் கூடுதலாக 30,000 மருந்துகளை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments