Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாகம் வளர்த்த தமிழக அமைச்சர்?

யாகம் வளர்த்த தமிழக அமைச்சர்?

யாகம் வளர்த்த தமிழக அமைச்சர்?
, வெள்ளி, 10 ஜூன் 2016 (17:37 IST)
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் யாகம் வளர்த்தார் என தகவல் பரவிவருகிறது.
 

 
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் தனது எம்எல்ஏ அலுவலகத்தில் யாகம்  நடத்தினார்.
 
இந்த யாகத்தில், தோப்பு வெங்கடாசலம், கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் எம்பி சத்தியபாமா, பவானி சாகர் எம்எல்ஏ ஈஸ்வரன், அந்தியூர் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன், முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த யாகம் எதற்காக என வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், கருப்பண்ணன் தனது அமைச்சர் பதவியைக் காப்பாற்ற யாகம் வளர்த்தார் என பலரும் பலகோணங்களில் தகவலை வெளியிட அது ஈரோாடு மாவட்டத்தை தாண்டி, தமிழகம் முழுக்க தீயாக பற்றி எரிந்த வண்ணம் உள்ளது.
 
இந்த தகவல் அறிந்த கருப்பண்ணன்  என்னை அந்த கருப்பண்ணன் சுவாமி தான் காப்பாற்ற வேண்டும் என பதறித்துடித்துவிட்டாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’நல்ல சாராயம் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது’ - ராமதாஸ்