Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் பதில் ஏற்றுக் கொள்ள முடியாது: சிபிஐ முத்தரசன் காட்டம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (23:06 IST)
நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி, தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது சாத்தியமில்லை என தமிழக அரசு கூறியுள்ளது ஜனநாயக அத்துமீறல் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது மக்களின் உரிமை. அதை தயக்கமின்றி தமிழக அரசு வழங்க வேண்டும்.
 
அதைவிடுத்து, நிதிப்பற்றாக்குறையைே காரணம் கூறி, தமிழக சட்டப் பேரவை நிகழ்சிகளை ஒளிப்பரப்ப இயலாது என அரசு கூறுவது, மக்களின் உரிமையை நிராகரிக்கும் செயல் மட்டும் அல்ல ஜனநாயக அத்துமீறல் ஆகும்.
 
எனவே, ஜனநாயக விரோத போக்கை கைவிட்டுவிட்டு, சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments