Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (09:30 IST)
2016 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. தமிழக ஆளுநர் ரோசய்ய இன்றைய கூட்டத்தில் உரையாற்றுகிறார், அவரது உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.


 
 
சென்னை மழை வெள்ளம், நிவாரணம், செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 
ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரை முடிந்ததும் சபாநாயகர் தனபால் அலுவல் ஆய்வு குழுவை கூட்டி இந்த கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்தலாம் என முடிவெடுப்பார்.
 
அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும் போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீது விவாதம் நடக்கும். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசுவர், பின்னர் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசுவார். பின்னர் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்
 
இந்த கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சனைகளாக, சென்னை மழை வெள்ளம், நிவாரண பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு, செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம், மதுவிலக்கு, ஜல்லிக்கட்டு விவகாரம், மீனவர் பிரச்சனைகள் போன்றவை எதிர் கட்சிகளால் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments