Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடனம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு : உயர் நீதிமன்ற மதுரை கிளை

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:50 IST)
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழகத்திலுள்ள கோயில் திருவிழா, அரசு விழாக்கள், திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இதனால் சமூக ஒழுக்கம் கெட்டு வருவதோடு பல பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாகின்றன. சில ஆபாச நடன நிகழ்ச்சிகளைக் காவல் அதிகாரிகளே தலைமையேற்று நடத்தி வைக்கின்றனர். அதனால், அவற்றைத் தடை செய்ய வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது இவ்விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, இந்த வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்