Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடனம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு : உயர் நீதிமன்ற மதுரை கிளை

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:50 IST)
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழகத்திலுள்ள கோயில் திருவிழா, அரசு விழாக்கள், திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இதனால் சமூக ஒழுக்கம் கெட்டு வருவதோடு பல பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாகின்றன. சில ஆபாச நடன நிகழ்ச்சிகளைக் காவல் அதிகாரிகளே தலைமையேற்று நடத்தி வைக்கின்றனர். அதனால், அவற்றைத் தடை செய்ய வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது இவ்விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, இந்த வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்