Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Siva
திங்கள், 6 ஜனவரி 2025 (10:06 IST)
தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில் ஆளுநர் உரையாற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால், சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ரவி மூன்றே நிமிடத்தில் உரையாற்றாமல் புறப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் புறப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் மூன்றே நிமிடத்தில் பேரவையிலிருந்து கிளம்பினார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அவரது கோரிக்கை ஏற்று கொள்ளப்படாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடியதால் ஆளுநர் ரவி பேரவையை தொடங்கியதும் தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டும் அரசு தயாரித்த உரையை பாதி மட்டும் படித்து விட்டு ஆளுனர் ஆர்.என்.ரவி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments