Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

Mahendran
திங்கள், 23 டிசம்பர் 2024 (09:22 IST)
அரசு பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது செல்போனில் பேசுவதாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது அதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.

மேலும், இது குறித்த உத்தரவை அனைத்து நோட்டீஸ் போர்டுகளிலும் குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்து சார்பில் அனுப்பப்பட்ட உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு, பேருந்து ஓட்டுநர்கள் இனியாவது பேருந்து இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Edited by 
Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments