Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துகிறது தமிழக அரசு

Webdunia
சனி, 1 நவம்பர் 2014 (13:35 IST)
இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி டாஸ்மாக் மதுபானங்களின் விலையை 10 முதல் 40 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில், இன்று (01-11-2014) சனிக்கிழமை முதல் அதிகளவு ஆல்கஹால் உள்ள மதுபாட்டில்களுக்கு 10 முதல் 40 சதவீதம் வரையிலும், குறைந்த அளவு ஆல்கஹால் உள்ள மதுபாட்டில்களுக்கு 5 சதவீதமாகவும் விலை உயர்வு இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழகத்தில் உள்ள 11 மதுபான நிறுவனங்களிடமிருந்து மதுபானங்களை டாஸ்மாக் நிருவாகம் கொள்முதல் செய்து வருகிறது. மது உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட், மதுபாட்டில்கள், அட்டை பெட்டிகள் என எல்லா மூலப்பொருட்களின் விலையும் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு இருமடங்கு உயர்ந்துவிட்டது. எனவே, மதுபான கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என்று மதுபான உற்பத்தியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இதனால், விலை உயர்விற்கு முதல்வர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments