Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்: ராமதாஸ்

தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்: ராமதாஸ்
, வியாழன், 10 செப்டம்பர் 2015 (22:59 IST)
தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் நிறுனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
அதிமுக மற்றும் திமுக அல்லாத கட்சிகளுன் தேர்தலை சந்திப்போம். பாமக தலைமைமைய ஏற்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றிக் கூட்டணி அமைப்போம்.
 
தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எல்லாம் நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். ஆனால் அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் திமுக அல்லது அதிமுகவோடு தயவு வேண்டி இணைந்துவிடுவார்கள். ஆனால், பாமக இனிமேல் யாரிடமும் கையேந்தாது.
 
ஆம் ஆத்மி க்சி மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் மக்மகள் செல்வாக்கைப் பெற்று ஆட்சியை பிடித்தனர். அதுபோல, பாமக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். இதற்காக திருச்சியில் வரும் 20ஆம் தேதி, நெல்லையில் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி  மண்டல மாநாடுகள் நடைபெறும் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil