அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்.. சீமான் அறிவிப்பு..!

Siva
புதன், 26 பிப்ரவரி 2025 (15:18 IST)
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகள் குறைய வாய்ப்பிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

மார்ச் ஐந்தாம் தேதி இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், "அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது, "ஏற்கனவே தொகுதி சீரமைப்பு குறித்த கருத்தை எதிர்த்து நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம். 2003 ஆம் ஆண்டிலேயே இதற்கு எதிராக அறிக்கை விட்டு பேசியிருக்கிறேன்.

எனவே தற்போது ஆளும் கட்சியின் கருத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி ஏமாந்த கூட்டம் என்பதால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments