Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளவங்கோடு விஜயதாரணியை காணலையே: திடீர் பேனரால் பரபரப்பு

விளவங்கோடு விஜயதாரணியை காணலையே: திடீர் பேனரால் பரபரப்பு
, சனி, 21 நவம்பர் 2015 (03:20 IST)
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ விஜயதரணியை காணவில்லை என தமாகா சார்பில் பேனர் வைத்துள்ளனர்.
 

 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மிதந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், மழையால் பாதிகக்ப்பட்ட மக்களுக்கு, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ விஜயதரணி ஆறுதல் கூறவில்லை என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, விஜயதரணி எம்.எல்.ஏ .வை காணவில்லை என்று தமாகா சார்பில் பேனர் வைக்கப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமாகாவினரின் இந்த செயலுக்கு விஜயதாரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil