Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வருகிறார் நிதின் கட்கரி: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2015 (23:34 IST)
தமிழகத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி திட்டங்களை துவக்கி வைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருகைதர உள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைக்க தமிழகம் வருகைதர உள்ளார். இந்த திட்டங்களைச் சுசீந்திரத்தில் துவக்கி வைக்கிறார். சுசீந்திரம் பாலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் 4 வழி சாலையைத் துவக்கி வைக்கிறார்.
 
சாலை, ரெயில் போக்குவரத்து ஆகியவற்றுக்காத்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாதவகையில் அவர்களுக்கு 4 மடங்கு அதிக விலை கொடுத்துதான் நிலங்களைக் கொள்முதல் செய்கிறோம்.
 
எந்த ஒரு விவசாயிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய அரசு இதனை செயல்படுத்தும். ஏழைகளின் நிலங்களைத் தனியாருக்கும் சரி, யாருக்கும் சரி மத்திய அரசு தாரை வார்க்காது.
 
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்குத் தேவையான நிலங்களைத் தமிழக அரசு கையகப்படுத்திதர வேண்டும் என்றார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments