Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

Mahendran
செவ்வாய், 25 மார்ச் 2025 (15:39 IST)
டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அங்கு யாரை சந்திக்க உள்ளார் என்பது எனக்கு தெரியும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தின் போது முதலமைச்சர் பதிலளிக்கையில்  ’தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை எந்த உணர்வோடு கடைப்பிடிக்கிறது என்பதையும், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் ஏன் இதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளன என்பதையும் விளக்கினார். 
 
குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியை தவிர்ந்த மற்ற அனைத்து கட்சிகளும், இந்த கொள்கையின் மீது தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்தார்.
 
மேலும்  இந்த விவகாரத்தில் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்" என்று உறுதியளித்துள்ளதாகவும், இதை கண்காணித்து, டெல்லியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்பதையும் முதலமைச்சர் தெரிவித்தார். "டெல்லிக்கு சென்றுள்ள அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாக இந்த அவையின் மூலம் வலியுறுத்துகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments