Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (17:29 IST)
வழக்கமாக மே மாதம் அனல் கக்கி, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவார்கள். ஆனால், இந்த ஆண்டு மே 15-ம் தேதிக்குள்ளேயே வெப்பம் தணிந்து, மழை ஆரம்பித்துவிட்டதால், கோடை வெயிலில் இருந்து மக்கள் தப்பிவிட்டதாக கருதப்பட்டது.
 
ஆனால், தற்போது திடீரென படிப்படியாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், "இனிமேல் ஜூன், ஜூலைதான் கோடைகாலமா?" என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
 
வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், உள் தமிழகத்திலும் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படலாம் என்றும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments