Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று எங்கெங்கு மழை? லிஸ்டு போட்ட வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (13:13 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 
 
காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. 
 
இதுதவிர வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்யலாம் எனவும், சென்னையின் பல பகுதிகளில் மேகமூட்டமாக வானம் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. ஆம், கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments