Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரு சொன்னா தமிழை நீக்கியதுனு? இங்க பாருங்க - விளக்கம் அளிக்கும் டுவீட்

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (19:59 IST)
காலை சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் உள்நாடு விமான போக்குவரத்து பகுதியில் விமான வருகை, புறப்பாடு அறிவிப்பு குறித்த தகவல் பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்ற செய்தி காலையில் வெளியாகி தீயாய் பரவியது.
 
இதையடுத்து தமிழுக்கு மத்திய அரசு வஞ்சம் செய்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையம் டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில்,
 
நாங்கள் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல் பலகையில் வழங்கி வருகிறோம் அதற்கு இதோ சான்று என்று பதிவிட்டு அதனுடன் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments