Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலப்பதிகாரத்தில் கெத்து, வெச்சு செய்வதெல்லாம் இருந்தது – தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர்

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (20:00 IST)
சிலப்பதிகாரத்தில் கெத்து, வெச்சி செய்வது போன்ற வார்த்தைகள் இருந்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் இணையா மாநாடு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “தற்போது உலகில் உள்ள செம்மொழிகளில் சீன மொழியும், தமிழ் மொழியும்தான் பேசக்கூடிய மொழியாக இருக்கின்றன. அதனால் மாணவர்கள் தங்கள் அன்றாட பயன்பாட்டில் தமிழை அதிகம் பேச வேண்டும்.

தற்போதைய இணைய உலகில் ஆங்கிலமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 0.01 சதவீதம்தான் தமிழ் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மாணவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ‘கெத்து’ , ‘வெச்சி செய்வது’ போன்ற வார்த்தைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் புதியவை அல்ல. ஏற்கனவே சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் காப்பியங்களில் அவை இடம்பெற்றுள்ளன” என்று பேசியுள்ளார்.

இது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அது உண்மைதானா என்று இணையத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments